Friday, 5 May 2017

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள்:



கறிவேப்பிலை இல்லாமல் சமையலை பார்ப்பது மிகக்கடினம். நமது உணவுகள் அனைத்திலும் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். கறிவேப்பிலை மணத்திற்காக தான் பயன் படுத்துகிறோம் என்றால் அது மிக தவறு. இயற்கை நமக்களித்த  மருத்துவத்திற்கு கறிவேப்பிலை மிக சரியான உதாரணம். நமது முன்னோர்கள் தொட்டு இன்று வரை நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தி வருகிறோம்."கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
பலமருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சமைக்கப்படுகின்ற பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவைகூட்டும் பொருளாக இந்த கருவேப்பிலை பயன்படுகிறது  இதன் தாவரவியல் பெயர், முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்ற இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். இலை, ஈர்க்கு, பட்டை, வேர் வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு  கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.
கறிவேப்பிலை இலையாக கையில் இருக்கும் போது அதிக மணம் இருக்காது. பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும் இளம் சூடான எண்ணெயில் போடும் போது தான் அதன் சுவையும், மனமும் அதிகரிக்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் கறிவேப்பிலை.
நிறைய இடங்களில், நிறைய பேர் சாப்பிடும் போது பார்த்திருக்கிறேன் அவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவது கிடையாது எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவர் இது தான் இன்றளவும் அனைத்து இடங்களிலும் நடக்கும் உண்மை. இதன் நன்மைகள் முழுவதும் தெரியதாவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் நிச்சயம் இதன் நன்மை தெரிந்த எவரும் இனி சாப்பிடுவார்கள் என்பது தான் என் கருத்து.

 கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.இது இரத்த சோகை,கண்புரை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு,உடல் பருமன்,வயிற்றுக்கடுப்பு,காலைச் சோர்வு,குமட்டல் மற்றும் வாந்தி,செரிமான கோளாறு,பசியின்மை மற்றும் சுவையின்மை,சிறுநீரக பிரச்சனைகள்,பூச்சிக்கடி,சில ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்துகின்றன.மிக முக்கியமான தகவல் என்ன வென்றால் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .
மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்ற ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய ஆராச்சி நிறுவனம்  கண்டறிந்துள்ளது,

கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.



  • அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும்.




  • கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.




  • தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும் நரைமுடியை போக்குவதற்கு, கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.


  • காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சேர்த்து உட்கொண்டு வந்தால், நமது உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை பிரச்சனையை வராமல் தடுக்கிறது. 



  • கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வைக் கோளாறுகள் நீக்கி, கண் பார்வையை பிரகாசமாக்க தினமும் கறிவேப்பிலை பானம் செய்து குடிக்கலாம்.



  • தினமும் ஒரு மாதம் தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் கறிவேப்பிலை பானம் செய்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் குணமாகிவிடும்.




  • கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல், தினமும் அதை காலையில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், கருமையான முடியின் வளர்ச்சி மற்றும் கல்லீரலின் வலிமையை மேம்படுத்துகிறது,வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.




  • கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.



  • வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
























.







Tuesday, 2 May 2017

சூரியகாந்தி எண்ணையின் முக்கியமான பயன்

சூரியகாந்தி எண்ணையின் முக்கியமான பயன் 




சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது. இது குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது என்பது அதை உறுதிப்படுத்தும் சான்றாகும். இது இரண்டாம் முறையாக மத்திய மிசிசிப்பி பள்ளத்தாக்கில் பயிரிடப்பட்டிருக்கலாம் அல்லது முற்காலத்தில் மெக்சிகோவிலிருந்து சோளம் அறிமுகமாகியபோது இதுவும் அறிமுகமாகியிருக்கலாம். வடக்கு மெக்சிகோவில் மிகவும் முந்திய காலத்தில் முழுதாக பயிரிடப்பட்டதாக சில தகவல்கள் கூறுகிறது
18 ஆம் நூற்றாண்டில் இருந்து , ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களுடன், சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடானது மிகவும் பிரபலமாகியது, ஏனெனில் தக்காலத்தின்  தடைசெய்யாத சில எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெயும் ஒன்றாக இருந்தது.

அப்பேற்பட்ட சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படித்தீர்கள் என்றால் அது தவறு சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படித்திருப்பீர்களானால் உங்களுக்கு மிகவும் நன்றாக புரியும்.உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், இந்த சூரியகாந்தியையே பயிரிடுகிறார்கள்.அந்த ஒரு சில நாடுகளில் பயிரிடும் இந்த சூரிய காந்தி எண்ணெய்யானது,நம் இந்திய நாடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.இந்திய மக்கள் தொகையை கணக்கிட்டால் இந்த ஒரு சில நாட்டில் பயிரிடப்படும் இந்த சூரியகாந்தி எண்ணெய் பங்கிட்டால் அது நமது சென்னை டிநகர் முழுவதுமாக அவர்கள் பயான்படுத்தும் அளவுக்கு கொடுக்க முடியாது.அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருகிறது என்றால்.கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.இந்த அரபு நாட்டில் தாயாருக்கு குருடாயில் மூலமாக தயாரிக்கப்படுகிறது எப்படி என்றால் அதை பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நமக்கு தேவையான சில அறிய நறுமண வகையை  எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற சுழற்சிதான் நமக்கு சிக்கனுக்கு மட்டும் இல்லாமல் நம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் முறையில் தான் தயாரிக்கப்படுகிறது,குருடாயிலுக்கு மினரல் ஆயில் என்று கூடப்பெயர் வைக்கலாம்.நாம ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க,மிகவும்சொ சரியாக சொன்னால் அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீங்கள் பயன்படுத்தும் இந்த  சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க அதுலயும்  நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.

கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருகிறது என்று இப்போது பாப்போம். அதில் இந்த சூரியகாந்திக்கு சம்பந்தமில்லை இந்த சூரியகாந்தி என்னைக்கும் சுகருக்கும் சம்பந்தம் இருக்கு.மாசத்துக்கு ஒரு தடவை  இல்லை என்றால் வாரத்திற்கு ஒரு தடவை சிக்கன் மட்டன் எடுத்து சாப்பிட்றபொது  உடம்புக்குள்ள  எப்படிடே கொழுப்பு சேரும் என்று சிந்திக்கிறீர்களா?

பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும்   குடிக்கிற.     அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது என்று பார்த்தால் உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது.  எண்ணெய்னால வரக்கூடியது ஆகும், உங்களோட  வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற எண்ணெயில் பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத  எண்ணெய்  சூரியகாந்தி என்னைத்தான்,
இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க சுமார் ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக 1 கோடி லிட்டருக்கு மேல் ஆகும்.நீங்கள் வாங்குகின்ற  சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல நாம் மேலே பார்த்தது போல் கலந்த கலவையை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் உட்கொண்டால் சுகர் மட்டும் இல்லாமல் கொலஸ்ட்ராலும் சேர்ந்து வரும். இந்த எண்ணெய்யை நீங்கள் லேப் டெஸ்ட் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.உங்கள்  வீட்டு அடுப்பங்கறைக்கு பொங்கல்  அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாருங்கள். என்ன தெரியும் என்றால்,
அதோட  வெளிப்புறத்தைப் பார்ப்பீர்களானால் கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள். வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு என்று சொன்னால் அது மிகை ஆகாது,சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்,எண்ணையை வைத்து சாப்பிடுவதை தவிர்த்து,நாம் கடைக்கு பொய் ,நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கி செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி உங்களோட  ஏரியாவுல இல்லை என்றால்  வேற ஊருக்குத்தான் போகணுமா தேடி போய்  செக்குல ஆட்டி  எண்ணெய்யை வாங்கிட்டு வந்து அதை பயன்படுத்துங்கள்.அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாருங்கள், ஆரோக்கியம் தானா வரும்.
அது இல்லாமல் ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகவில்லை என்றால் ஆரோக்கியமாக இருக்க முடியாது நீ ஆரோக்கியமா இருக்கணும்னா. இதை செஞ்சுத்தான் ஆகா வேண்டும்,இல்லையென்றால் நீங்கள்  ஒரு பெரிய  கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்,கடலை எண்ணெய் கொழுப்பு இருக்கிறது என்று பல பேருக்கு ஆச்சர்யம்.கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் பரப்பி விட்டது, நீங்கள் உபயோகப்படுத்தும் கடலை எண்ணெய்க்கு  5 சதவீதம் கொழுப்பு இருக்கிறது என்றால்,நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா  கொழுப்பு இருக்கிறது.ஏன் இன்று  பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு என்றால் எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை ஆகும்.நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு நஞ்சை கொடுத்திட்டு இருக்கோம் இங்க இயற்கை மாறவில்லை மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல,அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.
இன்னைக்கு இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குது,இது புரியாமல்  டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு இதை படித்த பிறகு திருந்துவார்களா?




Monday, 1 May 2017

முள்ளங்கியின் மருத்துவ குணம்

முள்ளங்கியின் மருத்துவ குணம்:




உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம்முடைய  முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் கறி  வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல் முள்ளங்கியில் மட்டும்  பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன.
முள்ளங்கி வெள்ளை,இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை.  சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும்  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.மூன்றாம் நூற்றாண்டில் இதன் பயன்பாடு இருந்ததாக, வரலாற்றுப் பதிவுகளால்அறிய முடிகிறது.மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.
பல வியாதிகளை தடுக்கும் மருந்தாகவும்  முள்ளங்கி பயன்படுகிறது இது
மஞ்சள் காமாலை,மூல வியாதி,எடை இழப்பு,புற்றுநோய்,வெந்நோய், மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் ஆயுர்வேதத்தில் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
முள்ளங்கி கீரை,குள்ளங்கி கிழங்கு,முள்ளங்கி சாறு போன்றவற்றிலிருந்தும் மருத்துவப்பயன் அதிகமாக இருக்கிறது.முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட முள்ளங்கி சாற்றை  பற்றி உள்ள மருத்துவ பயனை சிறிது பாப்போம்.



முள்ளங்கியை மாதம் ஒரு முறை மட்டும் ஜூஸ் செய்து குடித்தால்
  •  உடலின் உள்ள அழுக்குகள், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்ற உறுப்புகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் மற்றும் வைரஸ்களை வெளியேற்ற உதவுகிறது.

  • முள்ளங்கி ஜூஸ் நமது உடலில் உள்ள பித்த நீரின் அளவு மற்றும் செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

  • முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனை எப்போதுமே வராமல் தடுக்க உதவுகிறது.

  • முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளதால், இது வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.


  • முள்ளங்கி ஜூஸை மட்டும் குடிக்க முடியவில்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸில், கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸை கலந்து குடிக்கலாம்.



  • முள்ளங்கி ஜூஸை மட்டும் குடிக்க முடியவில்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸில், கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸை கலந்து குடிக்கலாம்.


  • முள்ளங்கி சாற்றை பருகி வர நீண்ட காலமாக இருக்கும்.வயிறுக்கோளாறு,பேதி,தலைவலி,தூக்கம்மின்மை,ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.


  • குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்து முள்ளங்கியை சேர்த்து வந்தால் அந்த குழந்தையுடைய மூளைவளர்ச்சி நன்றாக இருக்கும்.



  • முள்ளங்கி சாற்றை சர்க்கரை யோடு சேர்ந்து பருகுவதால் இருமல் குணமாகும்.



  • முடி உதிர்தல், பொடுகுத்தொல்லை போன்ற வற்றில் இருந்து முள்ளங்கி சாற்று நல்ல ஒரு தீர்வை தரும்.



  • இந்த சாற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் வெகுநாளாக இருக்கும் மூல நோய் கூட குணமாகும்.



குறிப்பு:

  • இந்த முள்ளங்கியில் அடங்கி உள்ள மிக முக்கியமான சத்துக்களாவன பைபர்,பொட்டாசியம்,காப்பர்,கால்சியம்,மக்னீசியம்,மாங்கனீஸ்,விட்டமின் பி6,ரிபோபிளவின்,ஆகியவை ஆகும்.