Saturday, 29 March 2025

காய்கறி பயிர்களை நடவு செய்ய

 ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா?


கத்தரி 

நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம் 

இடைவெளி – 1அடி

அறுவடைசெய்யும் நாள் - 150 முதல் 160 நாட்கள்



தக்காளி 

நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் நவம்பர் - ஜனவரி – மார்ச்

விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம் 

இடைவெளி – 1 அடி

அறுவடைசெய்யும் நாள் - 100 முதல் 135 நாட்கள்



புடலை

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம் 

இடைவெளி – இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் - 135-145 நாட்கள்



பீர்க்கை

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம் 

இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் - 125- நாட்கள்



பாகல்

நடவு செய்யும் மாதம் ஜு{லை- ஆகஸ்ட் , ஜனவரி - பிப்ரவரி

விதையளவு ஒரு ஏக்கருக்கு 1கிலோ 

இடைவெளி வரிவைக்கு வரிசை 8 அடி செடிக்கு செடி 1 அடி

அறுவடைசெய்யும் நாள் - 150- நாட்கள்



வெண்டை

நடவு செய்யும் மாதம் மார்ச் - ஜுன்; , ஜீன் - செப்டம்பர்

விதையளவு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ

இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி 

அறுவடைசெய்யும் நாள் 45 - 90 நாட்கள்



மிளகாய்

நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை- டிசம்;பர் - ஜனவரி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 400 கிராம் 

இடைவெளி –30 செ.மீ

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்



செடிமுருங்கை

நடவு செய்யும் மாதம் அக்டோபர்- நவம்பர், ஜு{ன், ஜுலை 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 200 கிராம் 

இடைவெளி பாருக்குபார் 8அடி செடிக்கு செடி 2அடி 

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்



வெங்காயம்

ரகம் கோ 4

நடவு செய்யும் மாதம் வைகாசி, புரட்டாசி, மார்கழி 

விதையளவு ஒரு ஏக்கருக்கு 500 கிராம் 

இடைவெளி –15 செ.மீ

அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்

பெப்பர் ரைஸ்

பெப்பர் ரைஸ்.....


தேவையான பொருள்கள்

சாதம் - ஒரு கப்

மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - தாளிக்க

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.


அதன் பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


கடலைப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் மிளகுத் தூளை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.


மிளகு வாசனை வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.


இந்த கலவையை சாதத்துடன் சேர்க்கவும்.பெப்பர் கலவை சாதத்துடன் நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.


இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவவும்.சூடான, சுவையான பெப்பர் ரைஸ் தயார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💖💖💖💖

ஆனியன் ரைஸ்



ஆனியன் ரைஸ்....


தேவையான பொருள்கள்

அரிசி - ஒரு ஆழாக்கு (சாதமாக வடித்துக் கொள்ளவும்)

வெங்காயம் - 2

கொத்தமல்லித்தழை - 2 கொத்து

தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி

கரம்மசாலாத் தூள் - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி

உப்பு - 1 1/4 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 4

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 4

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

செய்முறை

சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறி வைத்துக் கொள்ளவும்.


பச்சைமிளகாயை நீளவாக்கிலும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.


அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.


வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.


அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.


நன்கு மசாலாப் போல் வந்ததும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.


அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறி விடவும். மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைக்கவும்.


இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


எளிதில் செய்து விடக்கூடிய சுவையான வெங்காயம் சாதம் தயார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁😁👍👍👍👍


கேரட் ரைஸ்


கேரட் ரைஸ்.....


தேவையான பொருள்கள்


கேரட் - கால் கிலோ

சாதம் - 4 கப்

முந்திரி - 10

கிராம்பு - 3

பட்டை - 2

பச்சை மிளகாய் - 3

ஏலக்காய் - 2

கசகசா - ஒரு மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - கால் கப்

நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி + 2 மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


செய்முறை......


காரட்டை தோல் சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.


கொத்தமல்லியை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


அதே வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து அதில் அரைத்த தேங்காய் விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.


விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிய பிறகு அதில் துருவி வைத்திருக்கும் காரட்டை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.


அதன் பிறகு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் நன்கு சுருள கிளறி இறக்கி விடவும்.


ஒரு தட்டில் வடித்த சாதத்தை போட்டு பொலபொலவென்று உதிர்த்து விடவும்.


அதில் செய்து வைத்திருக்கும் காரட் மசாலாவை போடவும்.


பின்னர், மசாலா சாதத்துடன் நன்கு ஒன்றாகும் படி கிளறி விடவும்.


அதிக நேரம் கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் சாதம் குழைந்து விடும்.


அதன் மேலே வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💖💖💖💖😊

புதினா ரைஸ்



புதினா ரைஸ்....


தேவையான பொருள்கள்


புதினா - 2 கப்

அரிசி - 2 கப்

இஞ்சி - ஒரு சிறுத் துண்டு

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 2

வேர்கடலை - சிறிது

உப்பு - தேவைக்கு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

புளி - சிறிது

எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உளுந்து - அரை தேக்கரண்டி

கடலைபருப்பு - அரை தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - ஒன்று

செய்முறை

அரிசியை சுத்தம் செய்து சாதம் வடிக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.


புதினா இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புளி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.


பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.


இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் வடித்த சாதத்தை கலந்து விடவும்.


கடாயில் வேர்கடலை வறுத்து தோல் நீக்கி சாதத்தில் கலந்து எடுக்கவும். சுவையான புதினா ரைஸ் தயார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கேப்ஸிகம் ரைஸ்


கேப்ஸிகம் ரைஸ்

தேவையான பொருள்கள்

பாசுமதி அரிசி - ஒரு கப்

கேப்ஸிகம் - ஒன்று

உப்பு

முந்திரி - சிறிது

தாளிக்க

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உளுந்து - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

வறுத்து பொடிக்க

மிளகாய் வற்றல் - 5

தனியா - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உளுந்து - 1 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி

பட்டை - 1 துண்டு

வேர்கடலை - சிறிது

செய்முறை

அரிசியை கழுவி உதிரியாக வடித்து வைக்கவும்.


வறுக்க தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.


அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து 2 - 4 நிமிடம் வதக்கவும்.


இதில் பொடி, உப்பு சேர்த்து கலந்து விடவும்.


சூடாக சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.


வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.


சுவையான கேப்ஸிகம் ரைஸ் தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁😊😊😊😊

முட்டைக்கோஸ் சாதம்



முட்டைக்கோஸ் சாதம்


தேவையான பொருட்கள் 

முட்டைகோஸ் 

சாதம் 

பெரிய வெங்காயம் 

இஞ்சி 

பூண்டு 

பச்சை மிளகாய் 

கறி மசாலா தூள்

சோம்பு 

உப்பு 

எண்ணெய் 

கறிவேப்பிலை 

கொத்தமல்லி இலை 


செய்முறை 

கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 


வதங்கிய பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்கு வதக்கவும். 


பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.


💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁

அரைக்கீரை தக்காளி சாதம்



அரைக்கீரை தக்காளி சாதம்


தேவையான பொருட்கள் 

அரிசி

தக்காளி 

அரைக்கீரை

பெரிய வெங்காயம் 

பச்சை மிளகாய் 

காய்ந்த மிளகாய் 

மஞ்சள் தூள் 

கடுகு 

சீரகம் 

வெந்தயம் 

கடலைப்பருப்பு 

எண்ணெய் 

உப்பு 

கறிவேப்பிலை 

கொத்தமல்லி இலை 


செய்முறை 

குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 


வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும். 


பின்னர், ஒரு கப் அரைக்கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 


30 நிமிடம் ஊற வைத்த  இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥

அவரைப் பருப்பு தக்காளி சாதம்



அவரைப் பருப்பு தக்காளி சாதம்


தேவையான பொருட்கள் 

அரிசி 

தக்காளி 

அவரைப் பருப்பு

பெரிய வெங்காயம் 

பச்சை மிளகாய் 

காய்ந்த மிளகாய் 

மஞ்சள் தூள் 

கடுகு 

சீரகம் 

வெந்தயம் 

கடலைப்பருப்பு 

எண்ணெய் 

உப்பு 

கறிவேப்பிலை 

கொத்தமல்லி இலை 


செய்முறை 

குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 


வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும். 


பின்னர், 1/4 கப் அவரைப் பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 


30 நிமிடம் ஊற வைத்த  இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥😊💥🍁💥😊

தேங்காய் தக்காளி சாதம்


தேங்காய் தக்காளி சாதம்


தேவையான பொருட்கள் 

அரிசி 

தக்காளி 

தேங்காய்

பெரிய வெங்காயம் 

பச்சை மிளகாய் 

காய்ந்த மிளகாய் 

மஞ்சள் தூள் 

கடுகு 

சீரகம் 

வெந்தயம் 

கடலைப்பருப்பு 

எண்ணெய் 

உப்பு 

கறிவேப்பிலை 

கொத்தமல்லி இலை 


செய்முறை 

குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 


வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும். 


பின்னர், பொடியாக நறுக்கிய தேங்காய் 1/2 கப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.


30 நிமிடம் ஊற வைத்த  இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்


தேவையான பொருட்கள் :


பொருள் - அளவு

அதிக புளிப்பில்லாத மாங்காய்2

அhpசிஅரை கிலோ

எண்ணெய்தேவைக்கேற்ப

கடுகு கால் டீஸ்பூன்

பெருங்காயம்1 சிட்டிகை

கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

வேர்க்கடலை கால் கப்

உப்புதேவைக்கேற்ப 

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் 2

அரிசிகால் கிலோ

கொத்தமல்லி தழை1 கைப்பிடி

செய்முறை :


  அரிசியை நல்ல உதிரி உதிரியாக சாதம் செய்து ஆற வைக்கவும். மாங்காய்த் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயத்தைப் சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு மிளகாயையும் வதக்கி அதனுடன் மாங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும்.


  பின் சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கவும். ஆற வைத்த சாதத்தில் உப்பு சேர்த்து, மாங்காய் கலவையைச் சேர்த்து கலக்கவும். பிறகு பச்சைக் கொத்தமல்லி தழையை அதன் மேல் தூவவும். இப்போது சுவையான மாங்காய் சாதம் தயார்.


இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி, ஊறுகாய்


 

🍁🍁🍁🍁🙏


பெப்பர் சாதம்

 பெப்பர் சாதம் 

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - ஒரு கப்


நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்


மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்


மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்


கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்


உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்


நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்


கடுகு - ஒரு டீஸ்பூன்


கறிவேப்பிலை - ஒரு கொத்து


கொத்தமல்லி - ஒரு கைப்பிடி


உப்பு - தேவையான அளவு


பெருங்காயம் - மூன்று சிட்டிகை


எலுமிச்சை - அரை மூடி


எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்


செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடிக்க விடவும்.


வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.


பின்பு நிலக்கடலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து பொரிக்க விடவும்.


குடைமிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பொடிகள் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும்.


பரிமாறும்முன் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்...

🔥🔥🔥🔥

💞💞💞💞💞💞💞💞💞💞💞




புளி சாதம்

 புளி சாதம் 


தேவையான பொருட்கள்:

சாதம் - ஒரு ஆளுக்கு தேவையான அளவு


கெட்டியான புளிக் கரைசல் - அரை கப்


உப்பு - ஒரு தேக்கரண்டி


------------------------------


பொடிக்க:


---------------------------------


சீரகம் - 2 தேக்கரண்டி


வறுத்த வெந்தயம் - அரை தேக்கரண்டி


--------------------------


தாளிக்க:


--------------------------


கடுகு - ஒரு தேக்கரண்டி


கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி


வரமிளகாய் - 2


பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10


கறிவேப்பிலை - 10 இலை


எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை:

எண்ணெயை காயவைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து புளிக்கரைசலும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.


கொதித்ததும் தீயை அணைத்து விட்டு சாதம் சேர்த்து கிளறவும். வெந்தயம், சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து சாதத்தில் தூவவும்.


💖💖💖

 

முட்டை மசாலா சாதம்

 முட்டை மசாலா சாதம்....


தேவையான பொருட்கள்:

அரிசி - 1/4 கிலோ


முட்டை - 4


பெரிய வெங்காயம் -2


தக்காளி - 3


பச்சை மிளகாய் -2


மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்


தனியா தூள் - 1/2 டீஸ்பூன்


கறி மசாலா - 1 டீஸ்பூன்


பட்டை - சிறிது


கிராம்பு - 2


ஏலக்காய் - 1


இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்


உப்பு - தேவைக்கேற்ப


எண்ணெய் - 4 ஸ்பூன்.


செய்முறை:

சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.


அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


தக்காளி மசிந்து வதங்கியதும், எல்லா தூள்களையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறவும். கொஞ்சம் தளர இருக்கும் பொழுதே, ஆற வைத்த சாதத்தை போட்டு நன்கு கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


💖💖💖💖



பொடி சாதம்

 பொடி சாதம்.....


தேவையான பொருட்கள்:

பட்டைமிளகாய் - 10


கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி


சீரகம் - கால் தேக்கரண்டி


மிளகு - 10


அரிசி - அரை கிலோ


கடுகு - ஒரு தேக்கரண்டி


பெருங்காயம் - சிறிதளவு


கறிவேப்பிலை - ஒரு கொத்து


நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி


செய்முறை:

வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் பட்டைமிளகாய் எட்டு, சிறிது பெருங்காயம் எடுத்து வறுத்துக் கொள்ளவும்.


பின் கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து எண்ணெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.


எண்ணெய்யில் வறுத்த பொருட்களை சிறிது உப்பு சேர்த்து அம்மியில் பொடி செய்து கொள்ளவும்.


பின்பு வாணலியில் நான்கு கரண்டி எண்ணெய் விட்டு இரண்டு மிளகாய், கடுகு இரண்டையும் சேர்த்து தாளிக்கவும்.


சாதத்தை வடித்து அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பின் சாதத்தில் மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.


கலந்தபின் தாளித்த பொருட்களை கொட்டி கிளறவும். பின் பொடியைத் தூவிக் கிளறவும்.

🔥🔥🔥🔥



கட்டு சோறு

 கட்டு சோறு..


தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரை படி


சிறிய தேங்காய் - ஒன்று


புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு


காய்ந்த மிளகாய் - 4


கடுகு - அரை ஸ்பூன்


வறுத்த வேர்க்கடலை - அரை கப்


கறிவேப்பிலை - 2 கொத்து


பூண்டு - 2


நல்லெண்ணெய் - 150 மில்லி


உப்பு - ஒரு ஸ்பூன்


செய்முறை:

சோறு குழைந்துவிடாமல் பதமாக ஆக்கி எடுத்து சற்று ஆறவிட்டு வைக்கவும். தேங்காயை பால் பிழிந்து சுமார் அரை லிட்டர் அளவுக்கு பால் எடுத்துக்கொள்ளவும்.


அதிலேயே புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, கடுகு போட்டு வெடித்தவுடன் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்துக் கொண்டு, பூண்டு போட்டு தீயவிடாமல் லேசான பொன்முறுகலாகும்வரை வறுக்கவும்.


பிறகு கறிவேப்பிலை போட்டு தாளித்து, எடுத்துவைத்துள்ள தேங்காய்ப்பால், புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும்.


கொதிக்க ஆரம்பித்து திரண்டு வரும்போது இறக்கி, ஆக்கிவைத்துள்ள சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு ஆப்பையால் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து அழுத்தி விட்டு வைத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து (தண்ணீர் சற்று உறிஞ்சியவுடன்) பரிமாறலாம்.

💖💖💖💖



இட்லி பொடி சாதம்

 இட்லி பொடி சாதம் செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்


இட்லி பொடி - 2 மேசைக் கரண்டி


--------------------------


தாளிக்க:


----------------------------


 நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி


 கடுகு - தாளிக்க


கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி


கறிவேப்பில்லை - 4 இலை


செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.


தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.


இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி..

🔥🔥🔥🔥



தேங்காய் பால் சாதம்

தேங்காய் பால் சாதம்...


தேவையான பொருட்கள்:

அரிசி - 2 1/2 கப்


இஞ்சி - 250 கிராம்


பூண்டு - 10 பல்லு


மிளகாய் - 4


புதினா - 25 கிராம்


தேங்காய் - ஒன்று


பட்டை கிராம்பு - 25 கிராம்


பிரிஞ்சி இலை - ஒன்று


நெய் - 25 கிராம்


முந்திரி - 100 கிராம்


வெங்காயம் - 200 கிராம்


உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.


அடுத்து வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.


அதன் பின்னர் முந்திரி, நறுக்கிய வெங்காயம், புதினா ஆகியவற்றையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.


ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு தேங்காய் பால் 2 டம்ளர் அதில் சேர்த்து கொதிக்க விடவும்.


பின் அரிசியை களைத்து அதில் போட்டு கிளறி விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.


🔥🔥🔥🔥

 

வேர்க்கடலை சாதம்

வேர்க்கடலை சாதம் 

தேவையான பொருட்கள்:

அரிசி - முக்கால் கப்


மஞ்சள் தூள் - சிறிது\


உப்பு - தேவையான அளவு


------------------------


வறுத்து பொடிக்க


----------------------------:


வேர்க்கடலை - அரை கப்


எள்ளு - ஒரு தேக்கரண்டி


உளுந்து - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)


மிளகாய் வற்றல் - 4


தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி


கறிவேப்பிலை - 2 கொத்து


மிளகு - அரை தேக்கரண்டி


--------------------


தாளிக்க:


------------------


நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க


செய்முறை:

அரிசியை வேக வைத்து உதிரியாக சாதத்தைத் தயார் செய்து வைக்கவும். (மீந்து போன சாதம் இருந்தாலும் கூட பயன்படுத்தலாம்).


வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.


வெறும் கடாயில் மிளகாய் வற்றல், மிளகு, எள் மற்றும் உளுந்தை வறுக்கவும்.


பிறகு தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.


மிக்ஸியில் வேர்க்கடலையைத் தவிர மற்ற அனைத்தையும் போட்டு பொடித்துக் கொண்டு பிறகு அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.


அதனுடன் சாதம் மற்றும் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து 2 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து பிரட்டி இறக்கவும்.

🔥🔥🔥🔥



எக் ரைஸ்.

 ஈசி எக் ரைஸ்......

தேவையான பொருட்கள்:

உதிர் உதிரான‌ சாதம் ‍- 2 கப்


முட்டை - 3


எண்ணெய் - 3 அல்லது 4 தேக்கரண்டி


தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி


மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


உப்பு - தேவைக்கேற்ப‌


செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.


தூள் வகைகள் என்பதால் எண்ணெய் சூட்டில் கருகி விடும். எனவே சிறிது (ஒரு கைப்பிடி) தண்ணீர் சேர்க்கவும்.


தூள் கலவையில் முட்டையை உடைத்து ஊற்றவும்.


முட்டை வெந்து கீமா பதத்திற்கு வரும் வரை கிளறவும். முட்டையுடன் வடித்த‌ சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும்

🍁🍁🍁🍁


எள்ளு சாதம்

எள்ளு சாதம் செய்வது எப்படி....


தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு - அரை கப்


மிளகாய் வற்றல் - 5


வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி


பெருங்காயம் - குண்டு மணி அளவு


கல் உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு 4 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தீயை குறைத்து வைத்து கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்கவும். எள்ளு பொரிந்ததும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.


வறுப்பட்டவுடன் எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.


ஆறியதும் மிக்ஸியில் வறுத்த பெருங்காயம், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.


பிறகு அதில் வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


தேவையான போது ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மேலே எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும் படரும்படி கலந்து பரிமாறவும்....